படிப்பு வாசனையற்ற எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன் நான். அப்பா என்னையாவது படிக்க வைக்க வேண்டும் என கருதவில்லை. ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் என்னை நெசவு வேலையில் ஒத்தாசைக்கு வைத்துக் கொண்டார். ஆனால், எனக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அவரிடம் சொல்லியும் பயனில்லாமல் போய் விட்டது. எனவே, டீக் கடைகள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முடி திருத்தும் கடைகள் என் வாசக சாலைகள் ஆயின. அந்த சின்ன ஊரில் இருந்த நூலகத்தில் அவ்வப்போது பாலகுமாரன்,சுஜாதா படிப்பதுண்டு. வீட்டுக்கெல்லாம் புத்தகங்கள் எடுத்து வர இயலாது. ‘என்னடா படிப்பு’ என திட்டு விழும். வளர்ந்த பிறகு, அப்பாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டு அதே ஊரில் தனியாக வசித்த சமயத்தில் தான் நக்சல்பாரி இயக்கத் தொடர்பு கிடைத்தது. அதுதான், எனக்கு படிப்பதில் ஒரு ஒளிமயமான வாசலை திறந்து விட்டது. மார்க்சிய புத்தகங்கள் அறிமுகமாயின. அதில், முதலில் நான் படித்த புத்தகம் ஜார்ஜ் பொலிட்சரின் ‘மார்க்சிய மெய்ஞானம்’ புரிந்துக் கொள்ள சிரமமாய் இருந்தது என்றாலும், விடா முயற்சியும் சக தோழர்களில் ஒத்துழைப்பும் இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை கற்றுத் தந்தது. கூலி விலை லாபம், என்ன செய்ய வேண்டும், நாட்டுப் புற ஏழை மக்களுக்கு என வெறிப் பிடித்தது போல படித்தேன். பிறகு, வால்கா முதல் கங்கை வரை, பொதுவுடமைதான் என்ன? போன்ற ராகுல்ஜியின் புத்தகங்களைப் படித்தேன். தாய், வீரம் விளைந்தது, அதிகாலையின் அமைதியில் போன்ற சோவியத் நாவல்கள் படித்தேன். கொஞ்ச நாட்களில், விசைத்தறிப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு தலைமறைவாய் இருக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் இரவெல்லாம் படிப்பு. பகலில் இயக்க வேலை என போய்க் கொண்டிருந்தது. அப்போது தோழர் மாவோவின் புத்தகங்கள் சிலவற்றை இயக்கத் தோழர்கள் கொண்டு வந்துக் கொடுத்தார்கள். அவை இலங்கை தோழர்கள் மொழி பெயர்த்தவை. அது சோவியத்தும், சீனமும் முரண்பட்டிருந்த நேரம். லெனின் புத்தகங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தக் கடையில் சேலத்தில் கிடைக்கும். ஆனால், மாவோ புத்தகங்கள் அங்கெல்லாம் இருக்காது. இப்படி தோழர்கள் கொண்டு வந்துக் கொடுத்தால் தான் உண்டு. அதன் பிறகுதான் தோழர் ஸ்டாலின் எழுதிய புத்தகங்கள் ஒன்றிரண்டு கிடைத்தது. அவரது புத்தகங்களில் இன்றளவும் எனக்கு மிக பிடித்தமான புத்தகம் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதமும், வரலாற்றுப் பொருள்முதல் வாதமும்’ என்று சொன்னால் மிகையில்லை. தலைமறைவு காலம் முடிந்ததும் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கே ஆயுள் தண்டனைக் கைதிகளாய் இருந்த தோழர்கள் திம்மகாளி, நாகரசம்பட்டி கோபால், ராதாகிருஷ்ணன் போன்றவர்களையும் தியாகுவின் மாமனார் லெனின் என்கிற ரங்கசாமியையும் சந்திக்க வேண்டி வந்தது. அவர்களில், தோழர் நாகரசம்பட்டி கோபால் எனக்கு மார்க்சிய இயக்கவியல் வகுப்பெடுத்தார். ஓரளவு நான் அவரிடம் தான் இயக்கவியல் பிழையின்றி கற்றுக் கொண்டேன். சிறை மீண்டு வந்ததும், இயக்கத்தில் பல்வேறு முரண்பாடுகள் எழுந்து இயங்க முடியாத சூழலுக்கு இட்டுச் சென்றது. அது மேலும் என்னைப் படிக்கத் தோன்றியது. இந்த சமயத்தில் நான் செயல்பட்ட மக்கள் யுத்தக் குழுவில் இருந்து கடுமையாய் முரண்பட்ட தோழர் தமிழரசன் தேசிய இன பிரச்னைகளை முன் வைத்தார். அதனால், அவர் தனி இயக்கம் காண வேண்டி வந்தது. அவர் என்னை ஊருக்கே வந்து சந்தித்து என் கவனத்தை தேசிய இனப் பிரச்னையின் பால் திருப்பினார். ஆனால், அடுத்த சில மாதங்களில் பொன்பரப்பியில் ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்டார். நானும் இயக்கத்தை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு, சற்றேரக் குறைய இருபது வருடங்கள் படிப்பதும், எழுதுவதும் நின்று போனது. வாழ்க்கையில் வெறுப்பு தலை தூக்கிய அந்த நேரத்தில், மார்க்சியத்திற்கான நம் பங்களிப்பு என்ன? என்ற கேள்வி எழுந்தது. அப்போது தான் என் இயக்க வாழ்க்கையை எழுதினால் என்ன? என்று தோன்றியது. அதற்காக பல நாட்கள் தூக்கம் கெட்டேன். பல்வேறு யோசனைகள் எழுந்தன. அதில், இறுதியாய் தோன்றியது நாவல் வடிவில் இயக்க வாழ்க்கையை சொல்வது என்பதே சரியெனப் பட்டது. அதன் பின்னர், பல்வேறு நாவல்களை தேடிப் பிடித்துப் படித்தேன். அதில், என் மனதுக்குப் பிடித்த மொழி பெயர்ப்பு நாவலான ‘நினைவுகள் அழிவதில்லை’ என்னை செதுக்கியது எனச் சொல்லலாம். பஞ்சும், பசியும், மலரும் சருகும் உட்பட பல்வேறு நாவல்களைப் படித்தேன். தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் பலரது எழுத்துக்களை வாசித்து விட்டு, மீண்டும் ஒரு முறை மார்க்சிய நூல்களை படித்து விட்டுத்தான் தறியுடன் நாவல் எழுத ஆரம்பித்தேன். இதற்கெல்லாம் சில ஆண்டுகள் பிடித்தது. தறியுடன் நாவலுக்கு முதலில் நான் வைத்த பெயர் ‘தீப்பொறியாய் தறிகள்’ ஆனால், நாவலை தட்டச்சில் படித்த ஒரு சிலரில் தட்டச்சுக்காரரான ஜாபர்சாதிக் நாவலின் பெயரை மாற்றச் சொன்னார். அது சரியெனப் படவே வேறு ஒரு நண்பரிடம் பேச அவரும் தலைப்பை மாற்றச் சொன்னார். ஆனால், நாவலுக்கு முன்னுரை எழுதிய தோழர் கோவை ஈஸ்வரனுக்கு தலைப்பை மாற்றுவதில் உடன்பாடு இல்லை. பதிப்பாளர் திருப்பூர் குணாவும் பெயர் மாற்றைத்தை வலியுறுத்திச் சொல்ல ‘தறியுடன்..’ என பெயர் மாறியது. அந்த நாவல் என் கையெழுத்தில் 1047 பக்கம் வந்தது. அது புத்தக வடிவில் வரும் போது மூன்றில் ஒரு பகுதிதான் வருமென நினைத்திருந்தேன். ஆனால், 780 பக்கம் வந்த போதுதான் என் கையெழுத்து எவ்வளவு சின்னதென்று தெரிந்தது. பெரிய நாவலாய் இருந்தாலும் வெளியிட்ட பின் அதை யாரும் பொருட்டாக சொல்லாதது ஆறுதலாய் இருந்தது.
வெள்ளி, 3 ஜூன், 2016
ஞாயிறு, 29 மே, 2016
நேற்று சென்னை இக்சா அரங்கில் வாசகசாலை அமைப்பின் சார்பாய் முழுநாள் இலக்கிய கருத்தரங்கு நடந்தது. இதில், நான்காம் அமர்வாய் ‘அரசியல் நாவல்கள்’ என்ற தலைப்பில் பேச நண்பர்கள் அழைத்திருந்தார்கள். மதிய நேரத்துக்கு மேல் தான் நான் பேசும் அரங்கு என்றாலும், காலையில் முதல் அமர்வுக்கே சென்று விட்டேன். மற்ற அரங்குகளில், என்ன நடக்கிறது? என்பதை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் தான் அதற்கு ஒரு முக்கிய காரணம். முதல் அமர்வில், தமிழ் நாவல்கள் சினிமாவில் எப்படிப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதன் சாதக பாதகங்கள் பற்றி அலசப்பட்டது. இயக்குனர் கரு. பழனியப்பனும் அதில், கலந்துக் கொண்டு பேசினார். முதலில் பேசிய கவிஞர் சாம்ராஜ் தமிழ் நாவல்கள் திரைப்படங்களாய் மாறும் போது பெரும்பாலும் அரை குறையாய் தான் முடிகின்றன என்று சில நாவல்களையும் அது திரைப்படமாய் மாறிய போது எப்படி இருந்தன? என்று அலசினார். குறிப்பாய் மோகமுள் நாவலுக்கு நேர்ந்ததை நினைவு கூர்ந்தார். அடுத்துப் பேசிய சுபகுணராஜன் நாவல்களை திரைப்படமாக்கும் கலையில் இயக்குனர் மகேந்திரனின் நேர்த்தியைப் பாராட்டினார். முள்ளும் மலரும் நாவல் திரையில் இன்னும் சிறப்பாய் வந்துள்ளதை எடுத்துச் சொன்னார். புதுமைப் பித்தனின் சிற்றன்னை சிறுகதை படமாக்கப்பட்டது மிகச் சிறப்பு என்று கூறினார். பிரபாகரன் அடுத்துப் பேச முடிவில் கரு. பழனியப்பன் சினிமாக்காரர்களிடம் இலக்கியத்தை நோக்கி நகரும் தன்மை தற்போது இல்லை. இலக்கியவாதிகள் திரைப்படத்தை நேக்கி வாருங்கள் என்று கூறினார். இந்த அமர்வில், எனக்கிருந்த விமர்சனம் கம்யூனிச எழுத்தாளர்களின் நாவல்களும் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் சுட்டவில்லை. குறிப்பாய் டி.செல்வராஜ் எழுதிய தேநீர் நாவலைப் பற்றியும், அது குடிசை ஜெயபாரதி இயக்கத்தில் வெளி வந்தது பற்றியும் எவரும் சொல்லவில்லை.
அடுத்த அமர்வாய் அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி மற்றும் கவிஞர் உமாதேவி ஆகியோர் ஒரு கலந்துரையாடலாய் தற்காலப் பிரச்னைகளை கவிஞர்கள், எழுத்தாளர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் ஏன் தொடுவதில்லை? என்று வினா எழுப்பினார்கள். அதற்கு நான் எந்தந்த விசயங்கள் எங்கே தொடப்பட்டிருக்கிறது அதன் படைப்பாளி யார்? என்பதைச் சொன்னேன். குறிப்பாய், குட்டி ரேவதி கூடங்குளம் அணு உலை பிரச்னைப் பற்றி கவிதை எழுதியது குறித்துப் பேசப்பட்ட சமயத்தில் இடிந்தக்கரை சுந்தரி என்ற பெண் போராளி கூடங்குளம் போராட்டத்தில் தான் பட்ட அனுபவத்தை நாவலாய் வடித்திருக்கிறார் என்பதை எடுத்துச் சொன்னேன். நண்பர்கள் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி. உணவு இடைவேளைக்குப் பின், மூன்றாம் அமர்வாய் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள் உரையாற்றினார். அவரிடம் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அவரது பதிலில் சில தகவல்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது. குறிப்பாய் சிறு துறைமுகங்கள் பற்றி அவர் சொன்ன செய்தியில் பெரு துறைமுகங்கள் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு தோதாய் இல்லை என்பதும், மத்திய அரசுகள் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாய் இல்லை என்பதும் அறிய முடிந்தது. ஆனால், இந்துத்துவாவுக்கு அவர் சொன்ன பதில் தான் இப்போது நினைத்தாலும் பயந்து வருகிறது. அதாவது இந்துத்துவா என்பது பக்குவமாம்.
நான்காவது அமர்வாய் அரசியல் நாவல்களைப் பற்றி முதலில் நான் பேசினேன். அதில், அரசியலற்ற நாவல்க என்று எதுவும் இல்லை அப்படி சொல்லும் நாவல்கள் எதுவாய் இருந்தாலும் அவற்றில் நிச்சயமாய் அரசியல் இருக்கும் என்று பேசினேன். எழுத்து என்பது மக்களின் பிரச்னையை சொல்வதாய் இருக்க வேண்டும் என்றும், அது தீர்வை நோக்கிய முன் நகர்த்தலாய் இருப்பது இன்னும் சிறப்பு என்றும் கூறினேன். மக்களின் போராட்டங்களை சொல்லும் நினைவுகள் அழிவதில்லை, தோல், பஞ்சும் பசியும், கீழைத் தீ போன்றவற்றை குறிப்பிட்டு விட்டு இறுதியாய், எனது தறியுடன் மற்றும் வந்தேறிகள் நாவல்களைப் பற்றிப் பேசினேன். நக்சல்பாரி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசினேன். ஒரு அரசியல் கருத்தரங்கு போல இருந்தது என்றே பார்வையாளர்கள் கூறினார்கள். எனக்கு அடுத்துப் பேசிய அரவிந்தன் புளியமரத்தின் கதை, ரப்பர் போன்ற வேறு சில நாவல்களைப் பற்றி பேசினார். ஜெயமோகனை அவர் புகழ்ந்த விதம் ஏற்புடையதாய் இல்லை.
இறுதி அமர்வாய் இயக்குனர் பா.ரஞ்சித் உரை நிகழ்த்தும் போது மாலை ஆறு மணியாகி விட்டது. எனக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் பேரவையின் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நேரமாகி விட்டதால் அவரிடம் விடைப் பெற்றேன். வேறு நிகழ்ச்சியில் அவர் உரையை கேட்க நேரும் என்று நினைக்கிறேன்.
பொதுவாய் இது போன்ற இலக்கிய நிகழ்வுகளை நடத்தும் நண்பர்கள் தங்களது உழைப்பில் செலவிட்டுதான் நடத்துகிறார்கள். இதற்கென அவர்கள் படும் சிரமத்தை புரிந்துக் கொள்ள இந்த நிகழ்வு வாய்ப்பாய் அமைந்தது. மதிய உணவு நன்றாய் இருந்தது. வாசகசாலை கார்த்திகேயன் வெங்கட்ராமன், த. ராஜன் இன்னும் பெயர் தெரியாத நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
அடுத்த அமர்வாய் அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி மற்றும் கவிஞர் உமாதேவி ஆகியோர் ஒரு கலந்துரையாடலாய் தற்காலப் பிரச்னைகளை கவிஞர்கள், எழுத்தாளர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் ஏன் தொடுவதில்லை? என்று வினா எழுப்பினார்கள். அதற்கு நான் எந்தந்த விசயங்கள் எங்கே தொடப்பட்டிருக்கிறது அதன் படைப்பாளி யார்? என்பதைச் சொன்னேன். குறிப்பாய், குட்டி ரேவதி கூடங்குளம் அணு உலை பிரச்னைப் பற்றி கவிதை எழுதியது குறித்துப் பேசப்பட்ட சமயத்தில் இடிந்தக்கரை சுந்தரி என்ற பெண் போராளி கூடங்குளம் போராட்டத்தில் தான் பட்ட அனுபவத்தை நாவலாய் வடித்திருக்கிறார் என்பதை எடுத்துச் சொன்னேன். நண்பர்கள் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி. உணவு இடைவேளைக்குப் பின், மூன்றாம் அமர்வாய் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள் உரையாற்றினார். அவரிடம் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அவரது பதிலில் சில தகவல்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது. குறிப்பாய் சிறு துறைமுகங்கள் பற்றி அவர் சொன்ன செய்தியில் பெரு துறைமுகங்கள் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு தோதாய் இல்லை என்பதும், மத்திய அரசுகள் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாய் இல்லை என்பதும் அறிய முடிந்தது. ஆனால், இந்துத்துவாவுக்கு அவர் சொன்ன பதில் தான் இப்போது நினைத்தாலும் பயந்து வருகிறது. அதாவது இந்துத்துவா என்பது பக்குவமாம்.
நான்காவது அமர்வாய் அரசியல் நாவல்களைப் பற்றி முதலில் நான் பேசினேன். அதில், அரசியலற்ற நாவல்க என்று எதுவும் இல்லை அப்படி சொல்லும் நாவல்கள் எதுவாய் இருந்தாலும் அவற்றில் நிச்சயமாய் அரசியல் இருக்கும் என்று பேசினேன். எழுத்து என்பது மக்களின் பிரச்னையை சொல்வதாய் இருக்க வேண்டும் என்றும், அது தீர்வை நோக்கிய முன் நகர்த்தலாய் இருப்பது இன்னும் சிறப்பு என்றும் கூறினேன். மக்களின் போராட்டங்களை சொல்லும் நினைவுகள் அழிவதில்லை, தோல், பஞ்சும் பசியும், கீழைத் தீ போன்றவற்றை குறிப்பிட்டு விட்டு இறுதியாய், எனது தறியுடன் மற்றும் வந்தேறிகள் நாவல்களைப் பற்றிப் பேசினேன். நக்சல்பாரி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசினேன். ஒரு அரசியல் கருத்தரங்கு போல இருந்தது என்றே பார்வையாளர்கள் கூறினார்கள். எனக்கு அடுத்துப் பேசிய அரவிந்தன் புளியமரத்தின் கதை, ரப்பர் போன்ற வேறு சில நாவல்களைப் பற்றி பேசினார். ஜெயமோகனை அவர் புகழ்ந்த விதம் ஏற்புடையதாய் இல்லை.
இறுதி அமர்வாய் இயக்குனர் பா.ரஞ்சித் உரை நிகழ்த்தும் போது மாலை ஆறு மணியாகி விட்டது. எனக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் பேரவையின் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நேரமாகி விட்டதால் அவரிடம் விடைப் பெற்றேன். வேறு நிகழ்ச்சியில் அவர் உரையை கேட்க நேரும் என்று நினைக்கிறேன்.
பொதுவாய் இது போன்ற இலக்கிய நிகழ்வுகளை நடத்தும் நண்பர்கள் தங்களது உழைப்பில் செலவிட்டுதான் நடத்துகிறார்கள். இதற்கென அவர்கள் படும் சிரமத்தை புரிந்துக் கொள்ள இந்த நிகழ்வு வாய்ப்பாய் அமைந்தது. மதிய உணவு நன்றாய் இருந்தது. வாசகசாலை கார்த்திகேயன் வெங்கட்ராமன், த. ராஜன் இன்னும் பெயர் தெரியாத நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
புதன், 25 மே, 2016
கேரளத்தில் உள்ள மலையாளிக் கவுண்டர்கள் மற்றும் நரிக்குறவர்கள் உள்ளிட்ட எளிய மக்களை பழங்குடி இனத்தவர் பட்டியலில் மத்திய அரசு சேர்த்திருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது தான். அந்த மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பது சரியானதே. ஆனால், இவற்றைச் செய்யும் மத்திய அரசை இன்னொரு கோணத்தில் நாம பார்க்க வேண்டியுள்ளது. ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் பழங்குடியினர் நலனில் இதே மத்திய அரசு என்ன நிலை எடுத்து வருகிறது? கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு துணை நிற்கிறது. இதுதான் உண்மையில், பழங்குடியினர் நலனில் மத்திய அரசு காட்டும் அக்கறையா? அங்கே, துணை ராணுவத்தை வைத்துக் கொண்டு அப்பாவி வனவாசி மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப் பார்க்கிறது. பழங்குடியின மக்கள் தங்களுக்கு எதிரான நிறுவனங்களை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களை ஆயுத முனையில் நசுக்குகிறது அரசாங்கம். வேறு வழியில்லாமல் மரபு வழி ஆயுதம் ஏந்தும் மக்களை ‘மாவோயிஸ்ட்கள்’ என்று முத்திரை முத்துகிறது. முன்னணியினர் பலரைக் கைது செய்து சிறையில் வருடக்கணக்கில் அடைக்கிறது. இதெல்லாம் தான் மத்திய அரசின் பழங்குடியினர் நலனா? கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் மத்திய அரசு. அதை பழங்குடியினர் செங்குருதியில் அல்லவா செய்கிறது. எனவே, ஏதோ சில சலுகைகளை எளிய மக்களுக்கு கொடுத்து விட்டு தனது கனிம வளக் கொள்ளையின் ஆதரவு நிலையை மக்களின் கண்களில் மண் தூவி மறைக்கப் பார்க்கிறது. தீவிரவாத ஒழிப்புப் பிரிவு எனும் சீருடைப் படையை வைத்துக் கொண்டு அங்கே மத்திய மாநில அரசுகள் செய்யும் கொடுமைகள் கொஞ்சமா? நஞ்சமா? பழங்குடியினப் பெண்களில் பலர் அதிலும், இள வயதுப் பெண்கள் தங்கள் மண் காக்க ஆயுதம் ஏந்துகிறார்கள் என்று தெரிந்துக் கொண்ட சீருடைப் பட, திருமண ஆகாத பெண்களை தங்கள் முகாம்களுக்கு கொண்டு சென்று சித்ரவதை செய்கிறார்கள். இதனால், அங்கே சிறுவயது திருமணங்கள் அதிகம் நடப்பதாய் கூறப்படுகிறது. பெண்களின் மார்பகங்களில் பால் சுரக்கிறதா? அவர்கள் திருமணம் ஆகி குழந்தைப் பெற்றவர்கள் தானா? என்று சோதிக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது மத்திய அரசின் ஆயுதப்படை. இதெல்லாம் எதற்காக மலைவாழ் மக்களை விரட்டி விட்டு அவர்களின் கனிம வளத்தைக் கொள்ளையடிக்கத்தானே. அப்புறம், எங்கிருந்து வந்தது மத்திய அரசின் எளிய மக்கள் பற்றிய அக்கறை?
எழுத்தாளர் பாரதிநாதன்:
எழுத்தாளர் பாரதிநாதன்:
விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாய் தரப் போவதாய் ஆட்சிக்கு வந்திருக்கிறது அதிமுக அரசு. உண்மையில் இந்த இலவசத்தால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்களுக்கு பெரிதாய் நன்மையில்லை. ஏனெனில், மின்சாரத் தட்டுப்பாடு நிலவும் இந்த கோடைக் காலத்தில் மின் கட்டணத்தையே ரத்து செய்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்த இலவசம் வாக்காளர்களை கவர தேர்தல் காலத்து கவர்ச்சி அறிவிப்பே தவிர, உண்மையில் காலாவதியான ஒன்றே. வெளியில் இருந்துப் பார்க்கும் பலருக்கும் ஏதோ முதல்வர் விசைத்தறியை வாழ வைத்து விட்டார் என்று வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால், வெறும் கண் துடைப்பே இந்த 750 யூனிட மின்சாரம் என்பது. இதற்குப் பதிலாய் உண்மையில் இந்த அரசு விசைத்தறியாளர்கள் மீது அக்கறைக் கொண்டிருந்தால், சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்து உபயோகப் படுத்துவதற்கு அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரலாம். இதற்கு மத்திய அரசு மான்யமாய் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருகிறது. அதைக் கேட்டுப் பெற மாநில அரசு முயற்சி செய்யலாம். இதனால், அரசு தரும் மின்சாரத்தை சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்கள் நம்பி இருக்கத் தேவையில்லை. அரசாங்கம் அதிக விலைக் கொடுத்து மின்சாரத்தை வெளியாரிடமிருந்து வாங்கவும் தேவையில்லை. ஏற்கனவே மின் வாரியம் பல கோடி இழப்பில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழக மக்களின் கடன் சுமையை குறைக்கும் முயற்சியில் இறங்கலாம். இதைத் தான் விசைத்தறியாளர்களும் விரும்புகிறார்கள். அடுத்து கைத்தறிக்கு வாரியம் அமைத்து கூட்டுறவு சங்கங்களில் ஜவுளிக் கொள்முதல் செய்வது போலவே, விசைத்தறி துணிகளையும் கொள்முதல் செய்ய கூட்டுறவு சங்கள் இன்றைக்கு தேவையாய் இருக்கிறது. அப்படி அரசு செய்யுமானால் அதுதான் உண்மையான அக்கறையாய் இருக்க முடியும். தமிழகத்தின் மேற்கு மண்டலங்களில் ஜவுளிப் பூங்காக்கள் செயல்படுகிறது. அவற்றில் ஜெட்லூம் எனப்படும் நவீன விசைத்தறிகள் இயங்குகிறது. இஅவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் தரப்படுகிறது. இந்த முறையை மாற்றி பீஸ் ரேட் எனப்படும் நெய்யப்படும் துணிகளின் நீளத்திற்கேற்ற சம்பளம் தரப்பட வேண்டும். அப்போதுதான் ஓரளவாவது உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டும். மேற்கு மாவட்டங்களுக்குத்தான் இந்த முறை அதிமுக மந்திரி சபையில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமான விசைத்தறி தொழிலில் உள்ள இடையூறுகளைக் களைய முயல வேண்டும். செய்வார்களா?
விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாய் தரப் போவதாய் ஆட்சிக்கு வந்திருக்கிறது அதிமுக அரசு. உண்மையில் இந்த இலவசத்தால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்களுக்கு பெரிதாய் நன்மையில்லை. ஏனெனில், மின்சாரத் தட்டுப்பாடு நிலவும் இந்த கோடைக் காலத்தில் மின் கட்டணத்தையே ரத்து செய்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்த இலவசம் வாக்காளர்களை கவர தேர்தல் காலத்து கவர்ச்சி அறிவிப்பே தவிர, உண்மையில் காலாவதியான ஒன்றே. வெளியில் இருந்துப் பார்க்கும் பலருக்கும் ஏதோ முதல்வர் விசைத்தறியை வாழ வைத்து விட்டார் என்று வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால், வெறும் கண் துடைப்பே இந்த 750 யூனிட மின்சாரம் என்பது. இதற்குப் பதிலாய் உண்மையில் இந்த அரசு விசைத்தறியாளர்கள் மீது அக்கறைக் கொண்டிருந்தால், சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்து உபயோகப் படுத்துவதற்கு அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரலாம். இதற்கு மத்திய அரசு மான்யமாய் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருகிறது. அதைக் கேட்டுப் பெற மாநில அரசு முயற்சி செய்யலாம். இதனால், அரசு தரும் மின்சாரத்தை சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்கள் நம்பி இருக்கத் தேவையில்லை. அரசாங்கம் அதிக விலைக் கொடுத்து மின்சாரத்தை வெளியாரிடமிருந்து வாங்கவும் தேவையில்லை. ஏற்கனவே மின் வாரியம் பல கோடி இழப்பில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழக மக்களின் கடன் சுமையை குறைக்கும் முயற்சியில் இறங்கலாம். இதைத் தான் விசைத்தறியாளர்களும் விரும்புகிறார்கள். அடுத்து கைத்தறிக்கு வாரியம் அமைத்து கூட்டுறவு சங்கங்களில் ஜவுளிக் கொள்முதல் செய்வது போலவே, விசைத்தறி துணிகளையும் கொள்முதல் செய்ய கூட்டுறவு சங்கள் இன்றைக்கு தேவையாய் இருக்கிறது. அப்படி அரசு செய்யுமானால் அதுதான் உண்மையான அக்கறையாய் இருக்க முடியும். தமிழகத்தின் மேற்கு மண்டலங்களில் ஜவுளிப் பூங்காக்கள் செயல்படுகிறது. அவற்றில் ஜெட்லூம் எனப்படும் நவீன விசைத்தறிகள் இயங்குகிறது. இஅவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் தரப்படுகிறது. இந்த முறையை மாற்றி பீஸ் ரேட் எனப்படும் நெய்யப்படும் துணிகளின் நீளத்திற்கேற்ற சம்பளம் தரப்பட வேண்டும். அப்போதுதான் ஓரளவாவது உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டும். மேற்கு மாவட்டங்களுக்குத்தான் இந்த முறை அதிமுக மந்திரி சபையில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமான விசைத்தறி தொழிலில் உள்ள இடையூறுகளைக் களைய முயல வேண்டும். செய்வார்களா?
செவ்வாய், 24 மே, 2016
எழுத்தாளர் பாரதிநாதன்:
எழுத்தாளர் பாரதிநாதன்: கடந்த முறை போல் அல்லாது இந்த தேர்தல் பரபரப்பாய் இருந்தது.
எழுத்தாளர் பாரதிநாதன்:
எழுத்தாளர் பாரதிநாதன்:
கடந்த முறை போலல்லாது இந்த முறை 2016 தேர்தல் பரபரப்புக்குள்ளாது.
கடந்த முறை போலல்லாது இந்த முறை 2016 தேர்தல் பரபரப்புக்குள்ளாது.
எழுத்தாளர் பாரதிநாதன்: எழுத்தாளர் பாரதிநாதன்: எழுத்தாளர் பாரதிநாதன்:
எழுத்தாளர் பாரதிநாதன் தமிழக தேர்தல் களம் 2016 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை சற்ற...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)